Monday, December 15, 2008

மரம் வளர்க்க ஒரு அதிரடி நடவடிக்கை

மழை குறைந்து தண்ணீருக்காக மனித இனம் ஏங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இதைப் பற்றி கவலையில்லாமல் அலட்சியப் போக்குடன் இருப்பவர்களை பார்த்து ஒவ்வொரு குழந்தை பிறப்பின் பொழுதும் ஒரு மரம் நடுவோம் என்று கொஞ்சவும் வேண்டாம்.

பின்னர் அதன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு மரம் நடுவோம் என்று கெஞ்சவும் வேண்டாம்.

அதிரடியாக நாட்டைக் காடாக மாற்றுவோம் என்று உலகமெங்கும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் ஓஸோனில் உள்ள ஓட்டையை அடைக்க முடியும்.
உருகி வரும் பனிமலைகளை உருகாமல் தடுக்க முடியும்.

இல்லையென்றால் இன்று ஓட்டை விழுந்திருக்கும் ஓஸோன் படலம் கிழிந்து விடும். அதைத் தடுக்க இந்த மனித குலத்தால் முடியவே முடியாது.

ஏனென்றால் உருகும் பனிமலையின் தண்ணீர் வெள்ளத்தில் மனித குலம் மூழ்க வேண்டியது தான்.

No comments: