நகமும் சதையும் போல பல்லும் எனாமலும் போல
வண்டியும் சக்கரமும் போல என்னைப் பிரியாமல்
எனக்குள் ஒருவன் இருக்கிறான்.
நான் உண்மையை பேச நினைத்தால் அவன்
என்னை பொய் மட்டும் பேசச் சொல்கின்றான்.
நான் நல்லதையே பார்த்து நல்லதையே
செய்ய நினைத்தால் அவன் என்னை
கெட்டதைப் பார்த்து கெட்டதையே செய்யச் சொல்கின்றான்.
நான் நேர் வழியில் செல்ல இருக்கும் பொழுது
அவன் எனக்கு குறுக்கு வழியைக் காண்பிக்கின்றான்.
நான் ஒன்று நினைக்க அவன் அதற்கு
எதிர்மாறாகவே நினைக்கின்றான்.
தினமும் எந்த நேரமும் நான் அவனுடன்
போராட வேண்டி இருக்கிறது.
எந்தப் போராட்டத்திலும் அவனே ஜெயிக்கின்றான்.
அவனுடன் போராடி என்னால் ஜெயிக்க முடியவில்லை.
அதனால் தானோ என்னவோ நான் இன்னும்
ஒரு மிகச் சராசரி மனிதனாகவே இருக்கின்றேன்.
நான் ஒரு உத்தமனாக, லட்சியபுருஷனாக,
உயர்ந்த மனிதனாக மாற தினமும்
என் போராட்டம் தொடர்கிறது,
எனக்குள் இருக்கும் அவனுடன்.
Monday, June 2, 2008
Subscribe to:
Posts (Atom)