தேசப்பற்று என்பது யாரும் ஊட்டி வளர்ப்பதாலோ யாரையும் பார்த்து தெரிந்து கொள்வதாலோ வருவதல்ல . தாயின் கருவில் இருக்கும் பொழுதே இரத்தத்துடன் ஊறி வர வேண்டியதாகும்.
அந்தக் காலத்தில் மகாத்மா காந்தியை ஒரு தேசப்பற்று மிகுந்த சுதந்திர போராட்ட தியாகி என்று கேள்விப்பட்டு அவரை நேரில் பார்த்திராத , அவரது பேச்சை மட்டும் கேட்டு , அவர் செய்தித்தாள்களில் எழுதியவற்றை படித்தும் மட்டும் லட்சோப லட்சம் இந்தியர்கள் மொழி , இனம் , மதம் ஆகியவற்றை தாண்டி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் இன்றோ தினம் தினம் காலையில் இருந்து இரவு வரை நாம் புழங்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை விளக்கொளியில் தூக்கிப் பிடித்து காந்தி இருக்கிறாரா இல்லையா என்று ஆயிரம் தடவையாவது பார்க்கிறோம். அப்படி இருந்தும் நம்மில் பலருக்கு தேசப்பற்று வர மறுக்கிறதே.
இன்னும் நாம் லஞ்சம் , ஊழல் , வரதட்சணை , தீண்டாமை என்று தேசத்திற்கும் , மனித நேயத்திற்கும் ஒவ்வாதவற்றை செய்து கொண்டிருக்கிறோமே.
இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் தேசப்பற்று இரத்தத்தில் ஊறுவது எப்போது ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment