Thursday, May 29, 2008

முன்னும் பின்னும்

பின்னால் நடக்கக் கூடியதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது
என்பது எல்லோராலும் முடியாத ஒன்றாகும்.
ஆனால் சிலருக்கு அது பிறப்பிலேயே சேர்ந்து வரும்.
சிலருக்கு அனுபவத்தினாலும், முயற்ச்சியாலும் கிடைக்கும்.

அரசியல்வாதிக்கு முன்னாலேயே தெரிந்தால்
எந்த எலெக் ஷனிலும் தோற்க மாட்டான்.

வியாபாரிக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டால்
என்றைக்குமே நஷ்டம் அடைய மாட்டான்.

ஒரு மாணவனால் முன்கூட்டியே கணிக்க முடிந்தால்
எல்லா தேர்விலும் அவனே முதல்வன்.

ஒரு ஆண்மகன் தன் திருமணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என
தெரிந்து கொண்டால் திருமணமே செய்து கொள்ள மாட்டான்.

ஒரு கணவனும் மனைவியும் பின்னால் நடக்கப் போவதை
தெரிந்து கொண்டால் அவர்கள் ஒன்றாய் இருக்கவே முடியாது.

ஆனால் என்னால் பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பதை கணிக்க முடியும்.
இதைவிட மோசமாக யாராலும் எழுத முடியாது என்று நிறைய பின்னூட்டங்கள்
வரப் போகிறது என்று இப்பொழுதே எனக்குத் தெரிகிறது.

ம். ம். ம். என்ன செய்ய... எல்லோரும் என் ப்ளாக்கின் தலைப்பை படித்துக் கொள்ளுங்கள்.

5 comments:

Divya said...

\\இதைவிட மோசமாக யாராலும் எழுத முடியாது என்று நிறைய பின்னூட்டங்கள்
வரப் போகிறது என்று இப்பொழுதே எனக்குத் தெரிகிறது. \\

:))))

Divya said...

neenga word verification remove panunga, appo venam nerya comments varumnu nenaikirein;))

Divya said...

\\ஒரு ஆண்மகன் தன் திருமணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என
தெரிந்து கொண்டால் திருமணமே செய்து கொள்ள மாட்டான். \\


ithu toppuuuuuuuu of ur kirrukkals:)))

aanazagan said...

நன்றி திவ்யா.
தங்களது விமர்சனங்களுக்கும், அட்வைஸுக்கும் மிக்க நன்றி. நான் ப்ரெஷ் ப்ளாக்கர் என்பதால் தாங்கள் எனது ப்ளாக்கை செம்மைப் படுத்த அடிக்கடி இப்படி ஏதாவது டிப்ஸ் கொடுத்தால் ரொம்பவும் நல்லது. உங்கள்
ஆணழகன்.

Divya said...

\\தாங்கள் எனது ப்ளாக்கை செம்மைப் படுத்த அடிக்கடி இப்படி ஏதாவது டிப்ஸ் கொடுத்தால் ரொம்பவும் நல்லது. \\

கொடுத்திட்டா போச்சு:))